முதல்கட்டமாக 100 ரோபோ நாய்களை தயாரிக்க கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதில் 25 ரோபோ நாய்கள் தயார் செய்யப்பட்டு, பல்வேறு கட்ட பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருவதாக ராணுவ வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கனமழை பொழிவதால் டெல்லி விமான நிலைய மேற்க்கூரை இடிந்து விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் 'மாணவ-மாணவிகளுக்கான ஊக்கப்பரிசு வழங்கும் விழா' இன்று தொடங்கியது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த விழாவில், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, 12 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசளிக்கிறார்.
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாயில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் (இன்று) ஜூன் 30 காலை 9 மணி முதல் ஜூலை (நாளை) 1-ம் தேதி காலை 9 மணி வரை மட்டும் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலப் பகுதிகளில் குழாய் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
டி20 உலக கோப்பை 2 வது அரை இறுதிப் போட்டியில் பொறுமையுடன் பேட்டிங் செய்து, சிறந்த பந்துவீச்சால் 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.