கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல், சளி, டெங்கு, பறவை காய்ச்சல் என தொற்றுகள் அதிகரித்துக்கொண்டே வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம் என கேரள அரசு எச்சரித்துள்ளது.
"அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்!" என கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுடன் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை – கிண்டி வளாகத்திலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், “குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை” ரூபாய் 250.00 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கையில் அறிவித்துள்ளது.
கல்வி விருது வழங்கும் விழாவில், 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு வைர கம்மலும், 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு வைர மோதிரமும் வழங்கியுள்ளார் தளபதி விஜய்.
கள்ளக்குறிச்சியில் விஷக்கள்ளச்சாராயம் குடித்தத்தில் 190க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். அதில் 60 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.