அமெரிக்காவில் ஆன்லைன் கேம் விளையாடும் போது கேமருடன் ஏற்பட்ட பிரச்சனையால் நியூ ஜெர்ஸியில் இருந்து ஃப்ளோரிடாவுக்கு, 1000 மைல்கள் கடந்து சென்று கத்தியால் அந்த நபரை தாக்க முயன்ற எட்வர்ட் காங் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 27ம் தேதி வெளிவந்த கல்கி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 190 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த அவரது x தளத்தில் கல்கி படத்தைப் பற்றி கூறியிருக்கிறார். அதில் அவர் "கல்கியைப் பார்த்தேன். ஆஹா! என்ன ஒரு காவியம்! இயக்குனர் @Nagashwin7 இது இந்திய சினிமாவை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. என் இனிய நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். @Ashwini Dutt @SrBachchan @Prabhas Raju @ikamalhaasan @deepikapadukone மற்றும் அணி #Kalki2898AD. பாகம் 2க்காக காத்திருக்கிறோம். கடவுள் ஆசீர்வதிப்பார்" என புகழ்ந்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதை இனி சட்டப்பேரவை கூட்டம் என மாற்ற வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் அவர்களின் தீர்மானதத்தை சட்டப்பேரவையில் ஒருமனதாக இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷக் கள்ளச்சாராயம் குடித்து உயிர் பலிகள் ஏற்பட்ட நிலையில், “இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அந்தந்த மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்” என்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. அந்த போட்டியில் இன்று மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 'ஒரு இன்னிங்ஸில் அதிகப்பட்ச (603 runs) ஸ்கோரை விளாசிய அணி' என்ற சாதனையை படைத்துள்ளது இந்திய அணி! இதற்குமுன் 2024 பிப்ரவரியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி 575 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது, குறிப்பிடத்தக்கது.