நோயாளிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம்..!

Nikshay Poshan Yojana Scheme
Nikshay Poshan Yojana Scheme
Published on

நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம்

இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்று மட்டுமல்ல, காசநோயாளிகளின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் உள்ளது. 2023 உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி, உலக காசநோயாளிகளில் 27% இந்தியாவில் உள்ளனர். ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் இருவர் இந்நோயால் மரணமடைந்தனர். இதை எதிர்கொள்ள, மத்திய அரசு 2018 இல் நிக்ஷய் போஷன் யோஜனா திட்டத்தை தொடங்கியது, இத்திட்டம் காசநோயாளிகளுக்கு மாதம் ரூ.1000 ஊட்டச்சத்து உதவித்தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துகிறது, இது சிகிச்சையின் போது பயனளிக்கிறது.

திட்டத்தின் நோக்கம்

காசநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து, சத்தான உணவு, தரமான மருந்துகள் மற்றும் முறையான சிகிச்சை மூலம் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்றுவது இதன் முக்கிய நோக்கம். இத்திட்டம் நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இறப்பு விகிதங்களைக் குறைப்பதோடு, நோயின் பரவலை கட்டுப்படுத்த உதவுகிறது.

நன்மைகள்

  • சிகிச்சை முடியும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை.

  • 7ம் தேதி நேரடிப் பலன் பரிமாற்ற முறையில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

  • சில மாநிலங்களில் ஊட்டச்சத்துப் பொருட்களாக வழங்கப்படுகிறது.

  • உணவு, மருந்துச் செலவுகளுக்கு உதவுதல்.

  • நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் உதவுதல். 

தகுதி அளவுகோல்கள்

  • இந்தியக்  குடிமகனாக இருக்க வேண்டும்.

  • காசநோய் பாதிப்பு மருத்துவ ரீதியாக உறுதியாகியிருக்க வேண்டும்.

  • ஏப்ரல் 1, 2018க்கு பின் நிக்ஷய் போர்ட்டலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • சிகிச்சை பெறுவோர் அனைவரும் தகுதியுடையவர்கள்.

தேவையான ஆவணங்கள்

  • வங்கி பாஸ்புக் நகல்

  • ரத்து செய்யப்பட்ட காசோலை

  • ஆதார் அட்டை

  • மருத்துவச் சான்றிதழ்

  • தொலைபேசி எண்

  • ஆதார் இணைக்கப்பட்ட செயலில் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்கு

  • பாதுகாவலர் வங்கி விவரங்கள் (தேவைப்பட்டால்)

  • எழுத்துப்பூர்வ ஒப்புதல் படிவம் (குடும்ப உறுப்பினர் கணக்கு பயன்படுத்தினால்)

விண்ணப்பிக்கும் முறை

அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தில் படிவம் பெற்று, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும். படிவத்தில் விவரங்கள் பிழையின்றி பூர்த்தி செய்யப்பட வேண்டும். அல்லது நிக்ஷய் போர்ட்டல் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சுகாதார மைய அதிகாரிகள் விண்ணப்ப செயல்முறையில் வழிகாட்டுவார்கள்.

இதையும் படியுங்கள்:
பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்: உடலின் மறைந்திருக்கும் எதிரி!
Nikshay Poshan Yojana Scheme

நிக்ஷய் போஷன் யோஜனா காசநோய் இறப்பு விகிதங்களைக் கணிசமாகக் குறைத்துள்ளது. இத்திட்டம் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவு வழங்குவதோடு, பொருளாதார சுமையைக் குறைத்து, சிகிச்சையை தொடர உதவுகிறது. குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இது பெரும் வரப்பிரசாதம். இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்றுவதற்கு இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com