இனி பதிவு அஞ்சல் இல்லை... அதற்குப் பதிலாக இதுதான்! என்ன செய்ய வேண்டும்?

Post office
Post office
Published on

இந்திய அஞ்சல் துறை தனது சேவைகளில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அதாவது பல தசாப்தங்களாக இருந்து வந்த பதிவு அஞ்சல் (Registered Post) சேவையை, விரைவு அஞ்சல் (Speed Post) சேவையுடன் இணைப்பதாகும். இந்த புதிய நடைமுறை வரும் செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்புக்கான முக்கிய காரணங்களாக, செயல்பாடுகளை எளிதாக்குதல், சேவைத் திறனை மேம்படுத்துதல், அஞ்சல்களைக் கண்காணிக்கும் வசதியை அதிகரித்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சீரான சேவையை வழங்குதல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுவரை பதிவு அஞ்சல் பாதுகாப்பு மற்றும் முறையான விநியோகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதே சமயம், விரைவு அஞ்சல் வேகமான விநியோகத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இனிமேல், இந்த இரண்டு சேவைகளின் அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே சேவையாக விரைவு அஞ்சல் மூலம் வழங்கப்படும்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்?

வேகமான விநியோகம்: பதிவு அஞ்சல்களை விட விரைவு அஞ்சல்கள் மிக விரைவாக சென்றடையும். எனவே, கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் விரைவில் பெறப்படும்.

மேம்பட்ட கண்காணிப்பு: விரைவு அஞ்சலில் ஏற்கனவே உள்ள சிறப்பான கண்காணிப்பு (tracking) வசதி, இனி பதிவு அஞ்சல் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இதனால், தங்களது அஞ்சல் எங்கு உள்ளது என்பதை எளிதாகக் கண்காணிக்க முடியும்.

ஒரே சேவை: இரண்டு வெவ்வேறு சேவைகளுக்கு பதிலாக, இனி ஒரே சேவையைப் பயன்படுத்தலாம். இது வாடிக்கையாளர்களுக்கு குழப்பமின்றி எளிதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ChatGPT-ல் ரகசியம் இல்லை! - OpenAI CEO-இன் பகீர் எச்சரிக்கை!
Post office

பதிவு அஞ்சலில் முக்கிய அம்சமாக இருந்த, அஞ்சல் விநியோகம் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் (Proof of Delivery) மற்றும் பெறுநரின் கையொப்பம் பெறும் வசதி, இனி விரைவு அஞ்சலில் கூடுதல் கட்டணத்துடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சட்டபூர்வ மற்றும் முக்கியமான ஆவணங்களை அனுப்புபவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இந்த மாற்றம், நவீன அஞ்சல் சேவைகளுக்கு ஏற்ப இந்திய அஞ்சல் துறையை மேம்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும். தற்போது இறுதிவரை விரைவு அஞ்சல் மூலம் விநியோகிக்கப்படும் அஞ்சல்கள் அடுத்த நாளே சென்றுவிடும். சற்று தொலைதூர அஞ்சல்கள் குறைந்தபட்சம் 5 நாட்களுக்குள் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com