கேரளாவில் நோரோ வைரஸா...?

கேரளாவில் நோரோ வைரஸா...?
Published on

கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 19 மாணவர்கள் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பெற்றோர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கையாக வழக்கமான வகுப்புகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும், வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, கேரளா மற்றும் கர்நாடகாவில் பல கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நோரோ வைரஸ் தொற்று நோயானது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நோரோ வைரஸ் என்பது ஒரு பரவும் வைரஸ் நோயாகும், இது உலகளவில் கடுமையான இரைப்பை குடல் அழற்சிக்கு காரணமாக அமைகிறது. இது பொதுவாக 'ஃபுட் பாய்சன்' என்று குறிப்பிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பு, அசுத்தமான உணவு அல்லது அசுத்தமான மேற்பரப்பைத் தொடுதல் மற்றும் கழுவாத கைகளை வாயில் வைப்பதன் மூலம் இந்த நோய் பரவுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் படி, நோரோ வைரஸின் பொதுவான அறிகுறிகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், வயிற்று வலி, தலைவலி, உடல் வலி ஆகியவை ஆகும். நோரோ வைரஸ் தொற்று பொதுவாக நீங்கள் பாதிக்கப்பட்ட பிறகு ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் மற்றும் பின்விளைவுகள் அதிகம் இருக்காது.சில நோயாளிகளில், நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு ஒரு வாரத்திற்கு உடல் பலவீனமாக இருக்கும்.

குறிப்பாக கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு மற்றும் உணவைத் தயாரிப்பதற்கு அல்லது கையாளுவதற்கு முன்பு கைகளை அடிக்கடி மற்றும் சோப்பு மற்றும் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.

மாசுபடக்கூடிய மேற்பரப்புகள் அல்லது பொருட்களை கிருமி நீக்கம் செய்யவும்.கழிப்பறையை சரியான முறையில் கழுவுதல் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்தல் அவசியம். பச்சையாக, கழுவப்படாத உணவை உண்பதைத் தவிர்த்தல் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com