ஒரு வயது குழந்தை நாகப்பாம்பை கடித்து கொன்று உயிர் பிழைத்த கதை!

பாம்பு சில நிமிடங்களில் உயிரிழந்தது, ஆனால் குழந்தை மயங்கி விழுந்தான்.பதறிய குடும்பத்தினர், கோவிந்தை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
1-Year-Old Child Bites Cobr
Snake and Toddler
Published on

கற்பனையை மிஞ்சிய திகில் நிறைந்த சம்பவம் ஒன்று பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள மொக்சி பங்கத்வா என்ற சிறு கிராமத்தில் நடந்தது உள்ளது. ஒரு வயது குழந்தை, நாகப்பாம்பை கடித்து கொன்று, மரணத்தின் பிடியில் இருந்து திரும்பி வந்த கதை, உங்களை பயம்காட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்தும்!

கோவிந்த் குமார் என்ற அந்த ஒரு வயது குழந்தை, வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது அம்மா அருகில் வேலை செய்து கொண்டிருந்தார்.

திடீரென, மரக்குவியலுக்கு அருகே ஒரு நாகப்பாம்பு தோன்றியது. எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போக, கோவிந்த் அந்த விஷப்பாம்பைப் பிடித்து, தன் பற்களால் கடித்து விட்டான்!

பாம்பு சில நிமிடங்களில் உயிரிழந்தது, ஆனால் குழந்தை மயங்கி விழுந்தான்.பதறிய குடும்பத்தினர், கோவிந்தை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் பெட்டியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, அவனை கண்காணித்தனர். ஆச்சரியமாக, கோவிந்த் விரைவில் முழு உடல்நலம் பெற்று திரும்பினான்! இந்த செய்தி கிராமம் முழுவதும் பரவி, உள்ளூர் மக்களையும் ஊடகங்களையும் கவர்ந்தது.

பெட்டியா அரசு மருத்துவக் கல்லூரியின் குழந்தை நலத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் குமார் சௌரப் இந்த விநோத சம்பவத்தை விளக்கினார். “குழந்தை மருத்துவமனைக்கு வந்தபோது, வாயைச் சுற்றி வீக்கம் இருந்தது.

குடும்பத்தினர், கோவிந்த் நாகப்பாம்பை கடித்து, அதன் ஒரு பகுதியை விழுங்கியதாகக் கூறினர்,” என்றார். பாம்பு கடிக்கும்போது, அதன் விஷம் இரத்தத்தில் கலந்து நரம்பு மண்டலத்தை பாதிக்கும், இது மரணத்திற்கு கூட வழிவகுக்கலாம்.

ஆனால், கோவிந்தின் விஷயத்தில், விஷம் செரிமான பாதையில் சென்றது. மனித செரிமான அமைப்பு, சில சமயங்களில் விஷத்தை உடைத்து, தீங்கு விளைவிக்காமல் செய்யும்.

“அவனுக்கு உணவுக் குழாயில் புண்கள் அல்லது இரத்தப்போக்கு இல்லாததால், உயிர் பிழைத்தான். இது மாபெரும் அதிர்ஷ்டம்!” என்று டாக்டர் கூறினார்.

இந்த சம்பவம், இந்தியாவில் பாம்பு கடியின் தீவிரத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 80,000 முதல் 1,30,000 பேர் பாம்பு கடியால் உயிரிழக்கின்றனர்.

இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 58,000 பேர் உயிரிழப்பதாக தெரிகிறது. பீகாரில், 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை, 934 பேர் பாம்பு கடியால் இறந்துள்ளனர், மேலும் 17,800-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

கிராமப்புறங்களில், குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் பாம்பு கடி இறப்புகள் அதிகம்.

இதையும் படியுங்கள்:
18 ஆண்டுகளில், 850 முறை பாம்பு விஷத்தை தனக்குள் செலுத்திக் கொண்ட 'விஷ நிபுணர்' Tim Friede!
1-Year-Old Child Bites Cobr

பலர் மருத்துவமனைகளை அடையாமல், பாரம்பரிய மருத்துவர்களை நாடுவதால், உண்மையான இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.கோவிந்தின் கதை ஒரு திகிலூட்டும் அதிசயமாக இருந்தாலும், இந்திய கிராமங்களில் பாம்பு கடி எவ்வளவு பயங்கரமான அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை உரக்கச் சொல்கிறது. ஒரு வயது குழந்தை நாகப்பாம்பை கடித்து கொன்று, மரணத்தை வென்ற இந்த சம்பவம், உங்களை மிரட்டி, ஆச்சரியப்படுத்தி, சிந்திக்க வைக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com