ஆபரேஷன் சக்ரா; நாடு முழுவதும் சிபிஐ அதிரடி சோதனை!

சிபிஐ சோதனை
சிபிஐ சோதனை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்தி நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் சர்வதேச சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டறிய ‘ஆபரேஷன் சக்ரா’ என்ற அதிரடி சோதனையை நாடு முழுவதும் சிபிஐ நடத்தி வருகின்றது .

 -இதுகுறித்து சிபிஐ தரப்பில் தெரிவித்ததாவது:

 நாட்டில் ஆன்லைன் நிதி மோசடி உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டறிய நாடு முழுவதும் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 115 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

அதில் இதுவரை சைபர் கிரைம் குற்றவாளிகள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேரை கர்நாடக போலீசும், 7 பேரை டெல்லி போலீசும், 2 பேரை பஞ்சாப் போலீசும்,ஒருவரை அந்தமான் போலீசும் கைது செய்துள்ளனர்.

 -இவ்வாறு சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com