கோவை பேரூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள மருத்துவ மையத்தில் பணி செய்ய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். மருத்துவர், செவிலியர், நர்சிங் அசிஸ்டெண்ட் ஆகிய பதவிகளில் உள்ள 5 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதியின்படி, அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம். நர்சிங் அசிஸ்டெண்ட் பதவிக்கு மட்டும் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : இந்து சமய அறநிலையத் துறை
வகை : தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் : 05
பணியிடம் : கோவை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி : 01.11.2025
கடைசி தேதி : 02.12.2025
1. பதவி: மருத்துவர் (Doctor)
சம்பளம்: மாதம் ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: எம்.பி.பி.எஸ் இளநிலை மருத்துவப் படிப்பை முடித்திருக்க வேண்டும். TNMC பதிவு செய்திருக்க வேண்டும்.
2. பதவி: செவிலியர் (Staff Nurse)
சம்பளம்: மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: DGNM (Diploma in General Nursing Midwives)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவி: நர்சிங் அசிஸ்டன்ட் (Nursing Assistant)
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். அதன்படி, கல்வித்தகுதி, அனுபவம் உட்பட நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.11.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது https://perurpatteeswarar.hrce.tn.gov.in/ என்ற கோயிலின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நேர்காணலுக்கு அழைப்பு கடிதம் அனுப்பும் விதம் விரைவு தபாலில் பெறுவதற்கு ஏதுவாக விண்ணப்பதாரின் சுயவிலாசமிட்ட தபால் உறையில் சுமார் ரூ.70 தபால் தலைகள் ஒட்டப்பட்டு இணைந்து அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 641 010.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.