அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த ஒபிஸ் - ன் உரிமையியல் வழக்கு இன்று விசாரணை!

தீர்ப்பு
தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதிமுக பொதுக் குழுவில், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் தன்னை கட்சியில் இருந்து நீக்கியும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்தும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

Eps  Ops
Eps Ops

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு கூட்டியது செல்லும் என தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளில் பிப்ரவரி 23ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிடவில்லை என்றும், சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே முடிவெடுக்கும் எனவும் தெளிவுபடுத்தின.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராகவும், அந்த தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com