கோவையில் சட்டம் ஒழுங்கு! செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு!

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த நிலையில் கோவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். கடந்த 15 நிமிடங்களாக இவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

கார் குண்டு 
வெடிப்பு
கார் குண்டு வெடிப்பு

அதன்படி கோவையில் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் யார், யார், கண்காணிப்பில் இருக்கும் நபர்கள் யார் என்று ஆலோசனை செய்துள்ளனர். ரோந்து பணிகளை அதிகரிப்பது எப்படி, இரவு நேரத்தில் ரோந்து பணிகளை அதிகரிப்பது எப்படி ஆலோசனை செய்துள்ளனர். முக்கியமாக சந்தேகத்திற்கு இடமாக சுற்றும் நபர்களை பிடித்து விசாரிப்பது, என்ஐஏ கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் நபர்களை விசாரிப்பது பற்றியும் போலீசார் உடன் இன்று அமைச்சர் செந்தில் ஆலோசனை செய்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com