சரத் பவார், அஜித் பவார் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாரதிய ஜனதாவில் இணைந்தார். மேலும் தனக்கு துணை முதல்வர் பொறுப்பு உட்பட 8 எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் பெற்று தந்தார்.
இதனால் தேசியவாத காங்கிரஸின் பெரும் பகுதி நிர்வாகிகள் அஜித் பவார் உடன் சேர்ந்து பாஜகவில் இணைந்து விட்டனர் என்று மகாராஷ்டிரா அரசியல் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.இதனால் சரத் பவார் மற்றும் அஜித் பவார் இடையேயான பிரச்சனை தீவிரத்தில் உள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென்று அஜித் பவார் இல்லத்திற்கு சரத் பவார் சென்று இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து சரத் பவார் தரப்பினர் கூறுவது, இது அரசியல் நடவடிக்கை அல்ல. சரத் பவாரின் மனைவி அறுவை சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பி உள்ளார். அவரை நலம் விசாரிப்பதற்கு மட்டுமே அஜீத் பவார் அவரது வீட்டிற்கு சென்றார் என்று கூறியுள்ளனர்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை ஏற்படுத்த தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். இதில் சரத் பவர் முக்கிய பங்காற்றி வருகிறார். மேலும் சரத் பவார் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அஜித் பவார், சரத் பவார் வீட்டிற்கு திடீரென்று சென்று இருப்பது, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உடைக்க பாஜக முயற்சிப்பதாக அரசியல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.