மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக பொறுப்பேற்ற பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா!

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக பொறுப்பேற்ற பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நாட்டில் லஞ்சம், ஊழல்களுக்கு எதிரான தன்னாட்சி அமைப்பாகச் செயல்படுகிறது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம். ஜனநாயகத்தைக் காப்பதில், மத்திய தகவல் உரிமைச் சட்டத்தைக் காக்கும் மத்திய தகவல் ஆணையத்தைப் போலவே இந்த ஆணையமும் ஊழல்களுக்கு எதிராக முக்கியப் பங்கு ஆற்றி வருகிறது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராகப் பொறுப்பில் இருந்த சுரேஷ் என்.பட்டேலின் பதவிக் காலம் கடந்த டிசம்பர் மாதம் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து பொறுப்பு ஆணையராகப் பதவி வகித்து வந்த பிரவீண் குமார் ஸ்ரீ வத்சவா இன்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் (சிவிசி) தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற இந்தப் பதவி ஏற்பு விழாவில் பிரவீண் குமார் ஸ்ரீ வத்சவாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

logo
Kalki Online
kalkionline.com