லண்டன் ராணியின் இறுதிசடங்கில் குடியரசு தலைவர் திரௌபதி மர்மு

லண்டன் ராணியின் இறுதிசடங்கில்  குடியரசு தலைவர் திரௌபதி மர்மு
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பிரிட்டனின்  ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பாக கலந்து கொள்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி மர்மு. அதற்காக அவர் இங்கிலாந்து செல்கிறார்.

இங்கிலாந்து ராணியின் இறுதி சடங்கில் உலக தலைவர்கள் பலரும்  கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதனால்  வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை மன்னர் சார்லஸ் நேரிடையாக கவனித்து வருகிறார்.

பிரிட்டனில் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அஞ்சலி செலுத்த அதிக அளவில் கூடிய பொதுமக்கள் கூட்டத்தில் நேரில் சென்று தனது நன்றியினை தெரிவித்தார் மன்னர் சார்லஸ்.

logo
Kalki Online
kalkionline.com