தாய் மண்ணே வணக்கம்; எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி! 

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

 பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீபாவளி பண்டிகையை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் எல்லையில் கொண்டாடினார். அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிப் பேசினார். 

‘’நான் பிரதமராகப் பதவியேற்ற முதன்முறையில் தொடங்கி, ஒவ்வொரு வருட தீபாவளியையும் ராணுவ வீரரகளான உங்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தீவிரவாதத்தை முறியடிப்பதே தீபாவளி பண்டிகையின் தாத்பர்யம் ஆகும்.

அந்த வகையில் கார்கில் போர் அதற்கு சிறந்த உதாரணம். கார்கிலில் நமது படைகள் பயங்கரவாதத்தை அழித்ததற்கு சாட்சியாக நான் இருப்பதை என அதிர்ஷ்டமாக கருதுகிறேன். உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது’’ என்று உணர்ச்சிகரமாக பிரதமர் பேசினார். 

பின்னர் வீரர்கள் இசை கருவிகளை வாசித்து ஏ. ஆர் ரஹ்மானின் ‘’வந்தே மாதரம்’’ பாடலை உற்சாகத்துடன் பாட, மோடியும் அப்பாடலுக்கு கைத்தட்டி ஆர்வத்துடன் பாடினார். இதை பிரதமர் தன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

இந்நிலையில் பிரதமர் மோடியின் ட்வீட்டை ஏ.ஆர்.ரஹ்மான் தன் டிவிட்டரில் ரீட்வீட் செய்துள்ளார். மேலும்  '' இதயம் இதயம் துடிக்கின்றதே.. எங்கும் உன்போல் பாசம் இல்லை..ஆதலால் உன் மடி தேடினேன்.. தாய் மண்ணே வணக்கம்'' என பதிவிட்டுள்ளார் 

logo
Kalki Online
kalkionline.com