மணிரத்தினமா அவர் இருட்டில் படமெடுப்பாரே - PS 2 இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

மணிரத்தினமா அவர்  இருட்டில் படமெடுப்பாரே  - PS 2 இசை வெளியீட்டு  விழாவில்  அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது . பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளதில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். இதனை லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.  இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


PS 2 இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,

ஓரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் படிக்கின்ற காலத்தில் பலமுறை படித்திருக்கிறேன். இக்கதையை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். இயக்குனர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்றார். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் என்று வேண்டாம் என்றேன். ஆனால் படத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். வீட்டில் இருந்தே சல்யூட் வைத்தேன்.

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனக்கு வந்தியத்தேவன் கேரக்டர் மேல் பிரியம் அதிகம். காரணம் எனது தொகுதியில் இருக்கும் திருவலம் பகுதி தான் வந்தியத்தேவன் ஊரு. அதனால் எனக்கு பிடிக்கும்எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர். அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com