சுமை தூக்கும் தொழிலாளிகளுடன் தொழிலாளியாக ராகுல்காந்தி!

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளிகளுடன் இணைந்து பயணிகளின் உடைமைகளை சிறுது தூரம் தூக்கி சென்றார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி சமீப நாட்களாக பொது இடங்களுக்குச் சென்று, டிரைவர், விவசாயிகள், மெக்கானிக்குகள் போன்றோரை சந்தித்து அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி கேட்டறிந்து வருகிறார்.

இந்தநிலையில், டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி திடீரென சென்றார். அப்போது ரயில் நிலையத்தில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளிகளை சந்தித்து பேசினார். மேலும் சுமை தூக்கும் தொழிலாளிகளின் குறைகள், குடும்பச் சூழ்நிலை குறித்து ராகுல் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளி உடை அணிந்து, பயணிகளின் உடைமைகளை ராகுல் காந்தி சிறிது தூரம் தூக்கி சென்றார்.

உழைக்கும் வர்க்கத்தின் நிறமான சிவப்பு உடை அணிந்து சுமை தூக்கும் தொழிலாளிகளுடன் பேசியவாறு பெட்டிகளை தூக்கி சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் சென்ற போது ராகுல் காந்தி ஜிந்தாபாத் என தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். திரைப்படத்தின் பாடலை வைத்து ராகுல்காந்தி சுமக்கும் வீடியோவை காங்கிரஸ் நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com