

முதல்வர் மு.க. ஸ்டாலினும் ராகுல் காந்தியும் ஒரே மேடையில் பரப்புரை செய்ய வாய்ப்பில்லை. தனித்தனியாகத்தான் பரப்புரை செய்ய இருக்கிறார்கள். காரணம் இருவருக்கும் நேரமில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
ஏற்கனவே பயணத் திட்டம் மேற்கொண்டதால் ராகுல் காந்தியுடன் பிரச்சாரம் செய்ய ஸ்டாலினுக்கு நேரமில்லை எனவும், ராகுல் பரப்புரையில் திமுக சார்பில் யாராவது பங்கேற்போம் என்றவர், காங்கிரசுக்காக நாங்கள் ஓட்டு கேட்கிறோம், எங்களுக்காக காங்கிரசார் வாக்கு கேட்கிறார்கள், எல்லாம் ஒன்றுதான் என்று ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார்.