’பேசிப் பேசியே ஜீரோ ஆனவர் ரஜினிகாந்த்’ நடிகை ரோஜா காட்டம்!

’பேசிப் பேசியே ஜீரோ ஆனவர் ரஜினிகாந்த்’ நடிகை ரோஜா காட்டம்!

முன்னாள் தெலுங்கு முன்னணி நடிகர் என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், ’சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி. அவருடைய தொலைநோக்கு பார்வையினாலேயே ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக விளங்கி வருகிறது. நியூயார்க் நகரம் போல் சிறப்பு பெற்றுள்ளது’ என்று பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சு குறித்து, முன்னாள் நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, "பேசிப் பேசியே ஜீரோ ஆனவர் நடிகர் ரஜினிகாந்த். இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ’என்டிஆர் மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார்’ என்று ரஜினிகாந்த் சொன்னது தவறு. ரஜினிகாந்த் பேசியதைப் பார்த்து தெலங்கானாவில் உள்ள என்டிஆர் அபிமானிகள் அனைவரும் கோபத்தில் உள்ளனர்.

என்டிஆரை கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்து பேசுவது தவறு. ஆந்திர அரசியலைப் பற்றித் தெரியாத ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடு கூப்பிடார் என்பதற்காக ஐடியாவே இல்லாமல் பேசும் ரஜினி தற்போதும் ஜீரோவாகி உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு நடிகர்கள் போகும்போது அந்த மாநிலங்கள் பற்றித் தெரிந்து பேச வேண்டும். இல்லையென்றால் சைலன்டாக இருந்து விட வேண்டும். ரஜினிகாந்த் பேசியது குறித்து தெளிவாக ஒரு அறிக்கையை அவர் வெளியிட வேண்டும்.

ஜெகன்மோகன் ரெட்டி மாதிரி ஒரு முதலமைச்சரை எங்குமே பார்க்க முடியாது. அவர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான நிதி உதவிகளைச் செய்துள்ளார். சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பவன் கல்யாண், ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும் சரி, ஒன்றாக சேர்ந்து வந்தாலும் சரி, ஜெகன்மோகன் ரெட்டியை ஒன்றுமே செய்ய முடியாது" என்று ரோஜா பேசி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com