வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள்!

மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5793 பேர் முன்பதிவு!
வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள்!

மதுரை சித்திரை திருவிழாவில் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

வெளியூரில் வசிப்பவர்கள் மே 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சித்திரை திருவிழாவையோட்டி கள்ளழகர் எழுந்தருளும் வைகையாற்றில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 10 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வைகையாற்றில் ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களை இயந்திரங்களை கொண்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணிகள் முடிவுற்ற பின் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பதிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் ஆகும். இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 டிக்கெட்டுகள் முன்பதிவு நடந்தது. தெற்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையிலும் அனுமதிக்கப்பட உள்ளனர். மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5793 பேர் முன்பதிவு செய்தனர்.

இந்த கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளத்தில் maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி வரவேற்பு அறையில் மேற்படி நாட்களில் நேரடியாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதன்படி நேற்று முன்பதிவு செய்ய கடைசி நாளாகும். நேற்று இரவு வரை 500 ரூபாய் டிக்கெட்டில் 3,917 பேரும், 200 ரூபாய் டிக்கெட்டில் 1876 பேர் என மொத்தம் 5,793 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்த விண்ணப்பங்களுக்கு இன்று குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவ்வாறு உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் கிடைக்க பெற்றவர்கள் 27 முதல் 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள சிறப்பு விற்பனை மையத்தில் குறுஞ்செய்தியை காண்பித்து பணம் செலுத்தி உரிய நுழைவு கட்டண டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com