குட் நியூஸ்..!பாராசிட்டமல் உட்பட 30 மாத்திரைகளின் சில்லறை விலை குறைப்பு!

Paracetamol
Paracetamol
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாராசிட்டமல் உட்பட 35 அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விலையை குறைத்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த விலை குறைப்பு, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையைப் பெறுவோருக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலை குறைப்பு உத்தரவில், பல்வேறு முக்கிய மருந்துகளான, அழற்சி எதிர்ப்பு, இதய நோய், நுண்ணுயிர் எதிர்ப்பு, நீரிழிவு நோய் மற்றும் மனநல மருந்துகள் உள்ளிட்ட பல வகை மருந்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியான பாராசிட்டமல் (Paracetamol) மாத்திரைகள், மற்றும் அதன் கலவை மருந்துகள் (fixed-dose combinations) இந்த விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சில முக்கிய விலைக் குறைப்புகள்:

டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் அசிஃபுளோபினா, பாராசிட்டமல் மற்றும் ட்ரிப்சின் சைமோட்ரிப்சின் கலவை மாத்திரையின் விலை ரூ.13 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேடிலா ஃபார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் அதே கலவை மாத்திரையின் விலை ரூ.15.01 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான செபிக்ஸிம் மற்றும் பாராசிட்டமல் கலவை மருந்துகளும், வைட்டமின் டி சப்ளிமென்ட் ஆன கோல்கல்சிஃபெரால் துளிகளும், டைக்ளோபினாக் ஊசி மருந்தும் இந்த விலை குறைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.      

மத்திய அரசின் இந்த நடவடிக்கை, அத்தியாவசிய மருந்துகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. மருந்துகள் அதிக விலையில் விற்கப்படுவதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் சிகிச்சை பெறுவதில் சிரமங்களை சந்திப்பதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்தி, அவை நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்வதை தனது முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வால்மீகி சொன்ன இந்த 10 பொன்மொழிகள் உங்க வாழ்க்கையை மாத்தும்!
Paracetamol

இந்த புதிய விலை நிர்ணயத்தின்படி, மருந்துக் கடைகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் இந்த விலைப் பட்டியலை தங்கள் கடைகளில் வெளிப்படையாகக் காட்சிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்தால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிகப்படியான வசூலிக்கப்பட்ட தொகையை வட்டியுடன் திரும்பப் பெற வழிவகை செய்யப்படும் எனவும் ஆணையம் எச்சரித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம், நோயாளிகளுக்கு வருடத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் சேமிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com