யானை பாகன்கள் வசிக்க வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதியுதவி! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

யானை பாகன்கள் வசிக்க வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதியுதவி! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கோவை, நீலகிரியில் யானை பாகன்கள் வசிக்க உகந்த வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதியுதவி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். யானை பராமரிப்பாளர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த வீடுகள் கட்ட நிதியுதவி என முதல்வர் அறிவித்துள்ளார். முதுமலை தெப்பக்காடு, ஆனைமலை கோழிகமுத்து யானை முகாமில் உள்ள 91 பணியாளர்கள் பயனடைய நிதியுதவியினை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதே போல் ஆனைமலையில் உள்ள யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் அடிப்படை வசதிகளுடன் ரூ.8 கோடி செலவில் புதிய யானைகள் முகாம் அமைக்கப்படும். ஆனைமலையில் உள்ள கோழிகமுத்து யானைகள் முகாம் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், முகாமில் பணியாற்றும் 91 பேருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகள் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

அவர் விடுத்த அழைப்பின் பேரில் பொம்மன் பெள்ளி தம்பதியினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களிடம் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாம் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். கோவை, சாடிவயலில் புதிய யானைகள் முகாம் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com