#JUST IN : அமமுக வேட்பாளர் வீட்டில் ரூபாய் 14 லட்சம் பறிமுதல்..!

ammk candidate
ammk candidate
Updated on

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்(அமமுக) வேட்பாளர் சுந்தர்ராஜன் வீட்டில் ரூபாய் 14 லட்சம் பறிமுதல்.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும்படை சோதனைக்குச் சென்ற பொழுது தூக்கி வீசப்பட்ட சூட்கேசில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 14 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அமமுக வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வரும் நிலையில் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: வானதி சீனிவாசனை பைக்கில் அழைத்துச் சென்று வாக்கு சேகரித்த அண்ணாமலை..!
ammk candidate

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com