மோசடியில் இழந்த பணத்தை வட்டியுடன் மீட்ட SBI வாடிக்கையாளர் - அசரவைக்கும் வழக்கு..!

ஒரு வாடிக்கையாளராகத் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்.
state bank of india
sbiEditor 1
Published on

ஒரு சனிக்கிழமை மாலை, வழக்கம்போல் ரமேஷ் நாராயண் தனது வேலையில் மூழ்கியிருந்தார். திடீரென, அவரது அலைபேசிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி, அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவரது வங்கிக் கணக்கிலிருந்து அமேசான் என்ற பெயரில் ரூ.1,55,429 எடுக்கப்பட்டிருந்தது.

தான் எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்யாத நிலையில், தனது வாழ்நாள் சேமிப்பைக் கண்முன்னே இழந்த அதிர்ச்சியில் உறைந்துபோனார் ரமேஷ்.

அந்த நேரத்தில், SBI ஒரு மிகப்பெரிய வங்கி, தனது பணத்தைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை அவர் முழுமையாக இழந்தார்.

பதற்றமடைந்த அவர் உடனடியாக எஸ்பிஐ வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டார். மணிநேரம் காத்திருந்த பிறகு, கிடைத்தது ஒரு சம்பிரதாயமான பதில் மட்டுமே. அடுத்தகட்டமாக சைபர் கிரைம் போலீசையும் அணுகி புகார் அளித்தார்.

ஆனால், ரமேஷ் கொடுத்த புகாரில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்த மோசடிக்குத் தான் எந்தவித OTP-யையும் பெறவில்லை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லியும், அது கவனத்தில் கொள்ளப்படவில்லை.

தொடர்ந்து, வங்கி அதிகாரிகள் அவரது புகாரை முழுமையாகக் கண்டுகொள்ளாமல் விட்டனர்.

வங்கிகள் தொடர்பான புகார்களைக் கையாளுவதற்கு இருக்கும் வங்கி ஒம்புட்ஸ்மென் (Banking Ombudsman) அமைப்பை அணுகியும், அங்கும் நீதி கிடைக்கவில்லை.

தனது பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதற்காகத் தான் செய்த ஒவ்வொரு முயற்சியும் வீணானபோது, ரமேஷ் மனதளவில் உடைந்துபோனார்.

ஒரு வாடிக்கையாளராகத் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்.

இதனால், ஜனவரி 7, 2021 அன்று, மிகுந்த மன உளைச்சலுடன் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஆணையம், ரமேஷ் நாராயணின் தரப்பு நியாயத்தை முழுமையாக உணர்ந்து கொண்டது.

வங்கியின் இணையச் சேவை போதுமான பாதுகாப்புடன் இல்லை என்றும், மோசடிகளைத் தடுப்பதற்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இந்தச் சேவை குறைபாடு, ஒரு தீவிரமான மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறை என்று நீதிமன்றம் உறுதியுடன் அறிவித்தது.

இந்தத் தீர்ப்பு ரமேஷுக்கு மட்டுமல்ல, பல சாமானியர்களுக்கும் ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
எஸ்பிஐ வங்கியில் கொள்ளை: ₹21 கோடி தங்கம் மற்றும் ரொக்கம் கொள்ளை, அதிர்ச்சி சம்பவம்!
state bank of india
எஸ்பிஐ-யின் கிளை மேலாளர் மற்றும் மண்டல மேலாளர் இருவரும், ரமேஷ் இழந்த ரூ.1,55,429-ஐ, செப்டம்பர் 4, 2019 முதல் கணக்கிடப்பட்ட 8% வட்டியுடன் சேர்த்து, அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.30,000 இழப்பீடாகவும், வழக்குச் செலவுகளுக்காக ரூ.5,000 ஆகவும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பு, வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதில் வங்கிகளுக்கு உள்ள பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு தனிநபரின் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com