

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மொத்தம் 8,70,646 பள்ளி மாணவர்களும், 26,196 தனித்தேர்வர்களும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.
இன்று வெளியான 10-ம் வகுப்பில் பொதுத்தேர்வில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 96.47 சதவீதம் மாணவிகளும், 92,15 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வில் 5171 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 1931 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ் - 34 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 92 பேரும், கணிதம் பாடத்தில் 3194 பேரும், அறிவியல் பாடத்தில் 10476 பேரும், சமூக அறிவியலில் 3336 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் - 98.43% பேரும், ஆங்கிலம் 99,44% பேரும், கணிதம் - 97,36% பேரும், அறிவியல் - 98% பேரும், சமூக அறிவியல் - 97.93% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.