ஊழியர்கள் ஷாக்..! 300 ஊழியர்களை நீக்கியது வாஷிங்டன் போஸ்ட் ; சஷி தரூர் மகனும் வேலையிழந்தார்!

the washington post
the washington post source:thenewyorktimes
Published on

அமெரிக்க முன்னணி தினசரி நாளேடுகளில் ஒன்றான வாஷிங்டன் போஸ்ட், தனது ஊழியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சுமார் 300 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பணியாற்றியபடி சர்வதேச நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவந்த காங்கிரஸ் எம்.பி.சஷி தரூரின் மகன் இஷான் தரூரும் வேலையை இழந்தவர்களில் ஒருவர் ஆவார்.

பத்ரிக்கை அலுவலகத்தின் செய்தியறை காலியாக இருக்கும் புகைப்படத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்."இன்று @washingtonpost இல் இருந்து நான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன், பெரும்பாலான சர்வதேச ஊழியர்கள் மற்றும் பல அற்புதமான சக ஊழியர்களுடன். எங்கள் செய்தி அறைக்காகவும், குறிப்பாக போஸ்ட்டுக்கு சர்வதேச அளவில் சேவை செய்த ஒப்பற்ற பத்திரிகையாளர்களுக்காகவும் - கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக என் நண்பர்களாகவும் ஒத்துழைப்பாளர்களாகவும் இருந்த ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களுக்காகவும் நான் மனம் உடைந்தேன். அவர்களுடன் பணியாற்றுவது ஒரு மரியாதை," என்று தரூர் ஒரு X (முன்னர் ட்விட்டர்) பதிவில் எழுதினார்.

மற்றுமொரு பதிவில் "ஜனநாயகம் இருளில் இறக்கிறது" என்ற செய்தித்தாளின் சின்னமான முழக்கத்தைக் கொண்ட செய்தி அறையிலிருந்து ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்ட தரூர், "ஒரு மோசமான நாள்" என்று வெறுமனே தலைப்பிட்டார். இந்தச் செய்தியை அவரது தந்தை X இல் மீண்டும் பகிர்ந்து கொண்டார்.

1877 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த செய்தித்தாளை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2013 ஆம் ஆண்டு கிரஹாம் குடும்பத்திடமிருந்து $250 மில்லியனுக்கு வாங்கி கையகப்படுத்தினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com