சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் தீவிபத்து!

ராஜகோபுரத்தில்  தீவிபத்து
ராஜகோபுரத்தில் தீவிபத்து
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

விருது நகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலின் ராஜகோபுரத்தில் திடீரென ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசியில் பராசக்தி காலனியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் 50 ஆண்டுகள் பழமையானது. இக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த 6 மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை இக்கோயிலின் ராஜகோபுரத்தில் தீவிபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்தக் கோவில் வழியாக நேற்று மாலை திருமண நிகழ்சிக்காக சீர் வரிசைகள் கொண்டு செல்லும் பொழுது  பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தீப்பொறி, கோவிலின் ராஜகோபுரத்தின் மீது போர்த்தப் பட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாயில் விழுந்து, மளமள தீப்பிடித்து எரிய தொடங்கியது.

உடனடியாக சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவிலின் ராஜகோபுரத்தின் மீது தீ விபத்து ஏற்பட்டது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com