பட்டாசு தீக்காயம் சிறப்பு வார்டு துவக்கம்! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை!

பட்டாசு
பட்டாசு
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஒவ்வொரு வருடமும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பட்டாசு வெடித்து தீ விபத்து அதிக அளவில் ஏற்படும். அந்த தீக்காயத்துக்கான சிறப்பு சிகிச்சைகள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்யப்படும். அதற்கான வசதிகள் அனைத்தும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ளது.

இதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 10 ஆக்சிஜன் வசதியுடைய படுக்கை , 10 சாதாரண படுக்கை என, 20 படுக்கைகளுடன் தீக்காய வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டாசு
பட்டாசு

இந்த வார்டுகளை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று ஆய்வு செய்தார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் 75 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காய பிரிவு 1973ல் துவங்கப்பட்டது. தற்போது, 24 மணி நேரம் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக உள்ளது.

தீக்காயம்
தீக்காயம்

இந்த மருத்துவமனையில், 309 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் இணைப்பு கட்டடம், 2024ல் செயல் பாட்டுக்கு வரும்.

இந்த தீபாவளி பண்டிகையை கூடுமானவரையில் பாதுகாப்போடு பட்டாசு வெடித்து கொண்டாடி , பட்டாசு விபத்துகளை தவிர்ப்போம்.

logo
Kalki Online
kalkionline.com