ஒரே கல்லில் ரெண்டு மாங்கா: ரொனால்டோ அசத்தல் சாதனை!

ரொனால்டோ
ரொனால்டோ

கத்தார் நாட்டில் நடக்கும் உலக் கோப்பை கால்பந்து போட்டியில், நேற்று போர்ச்சுகல் மற்றும்  கானா நாட்டு  அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் போர்ச்சுக்கல் அணி கேப்டனும் நட்சத்திர கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரே போட்டியில் 2 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில், நேற்று போர்ச்சுகல் அணிக்கும்  கானா அணிக்கும் இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதமாக, இரண்டாம் பாதி ஆட்டம் சூடு பிடித்தது.

65-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். விரூவிறுப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியானது  கானா அணியை வீழ்த்தி, வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது, 3 புள்ளி ஒரு மீட்டர் உயரம் குதித்து ஹெட்டிங் செய்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை படைத்தார். இதன்மூலம், ஏற்கனவே அவர் 2 புள்ளி ஒன்பது, மற்றும் 3 மீட்டர் குதித்த சாதனை முறியடிக்கப்பட்டது.

மேலும், 5 உலக கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் 37 வயதான ரொனால்டோ தனதாக்கிக் கொண்டார். மொத்தத்தில், அவர் உலக கோப்பையில் அடித்த 8-வது கோல் இதுவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com