சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கலைஞர் மு.கருணாநிதி கேலரியை திறந்து வைத்தார் முதல்வர்!

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கலைஞர் மு.கருணாநிதி கேலரியை திறந்து வைத்தார் முதல்வர்!

ழைமையும் பெருமையும் வாய்ந்த சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஸ்டாண்ட் ஒன்றுக்கு கலைஞர் மு.கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த கேலரியை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் சேப்பாக்கம் மைதானம் ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதில், அண்ணா பெவிலியன் பகுதி இடிக்கப்பட்டு தங்கும் அறை, அலுவலகங்கள், ரசிகர்களின் இருக்கைகள் என முற்றிலும் நவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய ஸ்டாண்டுகளை முதமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இதற்கு கலைஞர் எம்.கருணாநிதி ஸ்டாண்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ். தோனி, சிஎஸ்கே அணியின் பவுலிங் கோச் டுவைன் பிராவோ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி மற்றும் அமைச்சர்கள் மா.சுப்ரமணியம், சேகர்பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த இரண்டு புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்ட பிறகு இவற்றில் அமர்ந்து சுமார் நாற்பதாயிரம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து ரசிக்க முடியும் என்று கூறப்படுகிறது. வரும் 22ம் தேதி இந்த மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஸ்டாண்டுகளில் ரசிகர்கள் அமர்ந்து போட்டியைக் காண அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com