இந்தியாவிற்கு எதிரான எந்த அச்சுறுத்தலுக்கும் இலங்கையை தளமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது- ரணில் விக்ரமசிங்கே!

இந்தியாவிற்கு எதிரான எந்த அச்சுறுத்தலுக்கும் இலங்கையை தளமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது- ரணில் விக்ரமசிங்கே!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றுக்கு நம் அண்டை நாடான இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சமீபத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இரு தினங்களுக்கு முன், அவர் இலங்கை திரும்பினார்.தன் அரசு முறை சுற்றுப்பயணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:...

“அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன ராணுவம் பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை. சீன வியாபாரிகளின் பயன்பாட்டில் அந்தத் துறைமுகம் இருந்தாலும் அதன் பாதுகாப்பு விவகாரங்களை இலங்கை அரசு கவனித்து வருகிறது.

சுமார் 1500 அண்டுகளாக சீனாவுடன் இலங்கைக்கு தொடர்பு உள்ளது. சீனாவின் ராணுவ படைத்தளம் எதுவும் இலங்கையில் இல்லை. சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அதுபோன்ற ஒப்பந்தம் போட அந்நாடு விரும்புவதாக தெரியவில்லை. இலங்கை எப்போதும் நடுநிலை நாடாக இருக்கும். இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தலுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

India china
India china

இலங்கை ஒரு நடுநிலை நாடு, ஆனால் இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார் ரணில் விக்ரமசிங்கே.

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் 'பாலிஸ்டிக்' ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான 'யுவான் வாங் 5' ஐ ஹம்பன் தோட்டா துறைமுகத்தில் நிறுத்த கடந்த ஆண்டு இலங்கை அனுமதித்தது . இது குறித்து இலங்கை - இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்கே இவ்வாறு பேசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com