செய்திகள்
சுப்பு லட்சுமி ஜெகதீசன் திடீர் விலகல் : அரசியல் ஒய்வு
திமுக வின் பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். அவர் தற்போது அரசியலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார்.
கலைஞர் அவர்களின் மறைவிற்கு பின் , திரு . ஸ்டாலின் அவர்களை முதல்வராக்கும் நோக்கத்தோடு கழகப்பணிகளை செய்து வந்தேன். தற்போது அந்த பணி சிறப்பாக நிறைவேறிவிட்டது. இந்த மன நிறைவோடு அரசியலிருந்து ஒய்வு பெறுகிறேன்..என தெரிவித்தார் சுப்பு லட்சுமி ஜெகதீசன். அதற்கான விலகல் கடிதத்தை முதல்வர் ஸ்டாலினிடன் வழங்கியுள்ளார்