குழுச்சண்டையில் உயிரிழப்புகள் மற்றும் சேதங்களுடன் போராடும் சூடான் மருத்துவமனைகள்!

குழுச்சண்டையில் உயிரிழப்புகள் மற்றும் சேதங்களுடன் போராடும் சூடான் மருத்துவமனைகள்!
Published on

கார்ட்டூம் போதனா வைத்தியசாலையில் வீதிச் சண்டைகளின் போது காயமடைந்த மக்கள் வார்டுகளுக்குள் பாய்ந்தனர். சூடான் தலைநகர் போர்க்களமாக மாறியது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பல நாட்களாக உள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளின் கையிருப்பு குறைந்து கொண்டே இருந்தது.

பின்னர் திங்கள்கிழமை அதிகாலை, ஷெல் தாக்குதலால் வார்டுகளில் ஒன்று கடுமையாக சேதமடைந்தது.

ஊடகங்களிடம் டாக்டர் அமீன் சாத் என்பவர். "நாங்கள் குறைந்தபட்ச திறன்களுடன் வேலை செய்கிறோம், நாங்கள் அனைவரும் சோர்வாக இருக்கிறோம், இங்கு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது என்று கூறியிருந்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, மருத்துவமனை முழுவதுமாக மூடப்பட்டது - ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் உறவினர்கள் உள்ளே சிக்கிக்கொண்டதால், அந்தப் பகுதி முழுவதும் மோதல்கள் வெடித்தன. தலைநகர் பகுதியில் குறைந்தது 12 மருத்துவமனைகள் மூடப்பட்டன, ஏனெனில் அவை சண்டையில் சேதமடைந்தன, சில மருத்துவமனைகள் மோதல்கள் காரணமாக அணுக முடியாதவையாக இருந்தன. அல்லது சிலவற்றில் எரிபொருள் தீர்ந்துவிட்டன என்று டாக்டர்கள் சிண்டிகேட் தெரிவித்துள்ளது.

சூடானின் இரண்டு உயர்மட்ட ஜெனரல்களுக்கு இடையிலான வன்முறை வெடிப்பால் கார்ட்டூமின் மருத்துவமனைகள் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளன. இரு தரப்பினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாலும், பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல் மூலமாக ஒருவர் மற்றொருவர் மீது குண்டுவீசிக் கொண்டதாலும், சனிக்கிழமை முதல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியவில்லை. சண்டை வெடித்ததில் இருந்து 180 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஐ.நா தூதர் வோல்கர் பெர்தெஸ் கூறினார்.

தலைநகர் மற்றும் அண்டை நகரமான ஓம்டுர்மானில் சுமார் 20 மருத்துவமனைகள் உள்ளன. அங்கும் கூட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் அவர்களை கையாள முடியாத அளவுக்கு வெகு குறைவான பணியாளர்களுடன் சில மருத்துவமனைகள் இயக்கப்படுகின்றன. அங்கும் கூட மருந்துகள், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றுக்கான விநியோகம் குறைவாகவே உள்ளது. இத்தனை பிரச்சனைகளுடன் அங்குள்ள மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் என தகவல்.

திடீரென வெடித்த சண்டையானது, மருத்துவமனைகளுக்குள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை சிக்க வைத்ததோடு, மற்ற ஊழியர்களையும் அங்கிருந்து வெளியேற முடியாமல் சூழலை உருவாக்கி விட்டது.

"கடந்த இரண்டு நாட்களில் நான் பலமுறை முயற்சித்தேன், ஆனால் சண்டைகள் காரணமாக (வீட்டிற்கு) திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று டாக்டர் சாரா மோஹி கூறினார், இதனால் தனது வீட்டிலிருந்து அவர் மத்திய கார்ட்டூமில் தான் பணிபுரியும் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை.

நிலைமை "மிகவும் மோசமானது" என்று டாக்டர்கள் சிண்டிகேட்டைச் சேர்ந்த அதியா அப்துல்லா கூறினார்.

கார்ட்டூமில் உள்ள பல மருத்துவமனைகளில் “இரத்தம், இரத்தமாற்றம் செய்யும் கருவிகள், நரம்பு வழி திரவங்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் பிற உயிர்காக்கும் பொருட்கள்” பற்றாக்குறை இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது.

கார்ட்டூம் போதனா மருத்துவமனையுடன், அல்-ஷாப் போதனா மருத்துவமனையும் திங்களன்று ஒரு வார்டு சண்டையில் தாக்கப்பட்டதை அடுத்து மூடப்பட்டது என்று பொது மேலாளர் அல் நமீர் ஜிப்ரில் இப்ராஹிம் தெரிவித்தார்.

திங்களன்று வெளியான ஆன்லைன் வீடியோ ஒன்று, மோதல்களுக்கு மத்தியில் அல்-ஷஹீத் சல்மா சிறுநீரக சிகிச்சை கிளினிக்கிலிருந்து நோயாளிகளை ஊழியர்கள் வெளியேற்றுவதைக் காட்டியது. பின்னணியில் துப்பாக்கிகள் சுடப்படும் சத்தத்துடன், மருத்துவமனைப் பணியாளர்கள் பதட்டத்துடன் துள்ளிக் குதித்து, ஒரு நோயாளியை வீல் ஸ்ட்ரெக்சரில் ஏற்றித் தள்ளியவாறு தெருவின் குறுக்கே விரைந்தனர். மற்றொரு வசதியாகக் கருதப்பட்ட போலீஸ் மருத்துவமனையும் ஞாயிற்றுக்கிழமை அன்று மூடப்பட்டது என்று சிண்டிகேட் தெரிவித்துள்ளது.

கார்டூமின் வடக்கு பஹ்ரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையின் தலைவரான டாக்டர். ஒசாமா அல்-ஷாஸ்லி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் சமூக ஊடகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு ஜெனரேட்டர்களை இயங்க வைக்க எரிபொருளைக் கோரினார்.

“நிலைமை மிகவும் சிக்கலானது. மக்கள் எரிபொருளை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ”என்று அவர் கூறினார், பல நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டன, மற்றவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர், அவர்களை வெளியேற்ற இடமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com