என்எல்சி சுரங்கத்தில் திடீர் தீ விபத்து: தீயை அணைக்க முயற்சி!

என்எல்சி சுரங்கத்தில் திடீர் தீ விபத்து: தீயை அணைக்க முயற்சி!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

டலூர் மாவட்டம், என்எல்சி தொழிற்சாலையில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் இரண்டாவதாக செயல்படும் சுரங்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புடைய மிகப்பெரும் ராட்சத இயந்திரங்கள் கொண்டு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இன்று காலை பல லட்ச ரூபாய் மதிப்புடைய ஒரு இயந்திரத்தில் உள்ள கன்வேயர் பெல்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த இந்நிறுவன ஊழியர்கள் உடனே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் தீ விபத்தில் எம் டி சி எனக் குறிப்பிடப்படும் நிலக்கரியை எடுத்துச் செல்லும் இயந்திரம் தீ பிடித்து பலத்த சேதம் அடைந்து உள்ளது. சமீப சில நாட்களாக இந்நிறுவன ஊழியர்கள் செய்து வந்த போராட்டத்தின் காரணமாக இயந்திரங்களின் பராமரிப்புப் பணி நடைபெறாமல் இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

கன்வேயர் பெல்ட்டில் தீ பிடித்து நாசம் அடைந்திருக்கும் அந்த இயந்திரத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி, கடந்த சில நாட்களாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், என்எல்சி நிறுவனம் புதிய பணியாளர்களைக் கொண்டு பணிகளைச் செய்து வந்ததும் இந்த தீ விபத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. திடீரென ஏற்பட்ட இந்தத் தீ விபத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவுகிறது.

logo
Kalki Online
kalkionline.com