#BREAKING : பிரபல யூ-டியூபர் சவுக்கு சங்கரின் தாயார் காலமானார்..!

savukku sankar
savukku sankar
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

தமிழ்நாட்டின் மிக பிரபலமான யூடியூபர்களில் ஒருவராக சவுக்கு சங்கர் இருக்கிறார். இவர் முன்னாள் காவல்துறை அலுவலராக பணியாற்றியவர். இவரது அரசியல் சார்ந்த செய்திகளினால் பலமுறை காவல்துறையினால் கைது செய்யப்பட்டவர். 

கடந்த சில தினங்களுக்கு முன் ஏப்ரல் 8, 2026 அன்று ஆந்திராவில் வைத்து சவுக்கு சங்கரை தமிழக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயாரான கமலா அவர்கள் இன்று(ஏப்ரல்.13) மதியம் காலமானதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இவர் தனது மகன் சவுக்கு சங்கரை சிறையில் இருந்து விடுவிக்க தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். தற்போது சவுக்கு சங்கருக்கு தாயாரின் இறுதிக் கடமையாற்ற வேண்டி நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com