அமைச்சர் மா.சு.க்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை.. என்ன ஆனது?

அமைச்சர் மா.சு.க்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை.. என்ன ஆனது?

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழக்கம்போல இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட பின்னர் தனது வீட்டில் பார்வையாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் பிரச்சினை உள்ள நிலையில், உடலில் சர்க்கரை அளவு குறைந்த காரணத்தால், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பரிசோதனையில் இதயத்தில் எந்த அடைப்புகளும் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக  மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (30.08.2023) அதிகாலை நடைபயிற்சி முடித்து விட்டு பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைச்சுற்றல் ஏற்பட்டது. 

உடனடியாக கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பரிசோதனையின் அடிப்படையில் அவர் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு (Coronary angiogram) இருதய ரத்த நாள பரிசோதனை செய்ததில் குறிப்பிடத்தக்க அடைப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.  அமைச்சருக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது என்று முடிவு எடுக்கப்பட்டு, இன்று மதியம் 2.10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com