

தேனாம்பேட்டையில் தற்போது தனது குடும்பத்துடன் வந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தனது மனைவி மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி,திமுக வேட்பாளர் உடன் தனது ஜனநாயக கடமையாற்றினார் .
முதல்வரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. வாக்களித்த பிறகு தனது எனது கைகளை உயர்த்தி காட்டிய முதல்வர் மு க ஸ்டாலின் செய்தியாளரிடம் "தமிழ்நாடு வெல்லும்" என்றார்.
தற்போது பெரும் பரபரப்பை உச்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டிகள் களை கட்டி வரும் வேளையில் எவருக்கு தமிழக மக்கள் ஆதரவு இருக்கும் என்று பலவித கருத்துக்கணிப்புகள் நடந்து வருகிறது அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்குகளை போட்ட பின் பேசும் ஒவ்வொரு சொல்லும் கவனிக்கத்தக்கதாக மாறி வருகிறது எனலாம்.
துணை முதலமைச்சர் மு க உதயநிதி ஸ்டாலின் எஸ் ஐ இ டி கல்லூரியில் தனது மனைவி கிருத்திகா மற்றும் மகனுடன் வந்து தனது வாக்கினை அளித்தார்.
இந்நிலையில் தற்போது கடலூரில் காலை 9 மணி நிலவரம் 14.84 சதவீதம் வாக்குப்பதிவு நிலவரம் எனத் தகவல்கள் வந்துள்ளது.மேலும் பல தேர்தல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.