திருவண்ணாமலை தீபத்திருநாள்
திருவண்ணாமலை தீபத்திருநாள்

திருவண்ணாமலை தீபத்திருநாள்:  2,500 பக்தர்கள் மலையேற அனுமதி!

திருவண்ணாமலை தீபத்திருநாள் இம்மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி அன்று காலையில் முன்னதாக வரும் முதல் 2,500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

-இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்று காலை 06.00 மணிக்கு செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு அங்கு முதலில் வரும்  2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த அனுமதி சீட்டு வழங்கப்படும். அவ்வாறு அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு மலையேற அனுமதிக்கப் படுவர்.

* மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

* பக்தர்கள் குறிப்பிட ஒரு பாதையில் மட்டும் பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே  மலை ஏறுவதற்கு அனுமதிக்கப் படுவார்கள். மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும்.

* பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப் படமாட்டாது.மேலும் நெய்யை அதற்கென அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.

-இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com