விபத்தில் சிக்கி கவிழ்ந்த லாரி: 4000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

டிப்பர் லாரி
டிப்பர் லாரி

குடியாத்தம் அருகே, லாரி கவிழ்ந்ததில் டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். அதே சமயம் கடத்தப்பட்ட, 4,000 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, தாங்கல் கிராமத்தில் இருந்து, நேற்று காலை ஜல்லி ஏற்றிக்கொண்டு வேப்பூர் கிராமம் அருகே, 'டிப்பர்' லாரி சென்றது.

எதிரே வந்த மற்றொரு லாரி டிப்பர் மீது மோதியதில், இரு லாரிகளும் கவிழ்ந்தன. இரு டிரைவர்களும் படுகாயம் அடைந்தனர்.

குடியாத்தம் டவுன் போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரியை சோதனை செய்ததில், 4,000 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டனர்.

குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வேலூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com