பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை கோவை வருகை!

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,  நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக நாளை கோவை வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 2024-ல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணியாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வரிசையில் தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக நட்டா நாளை கோவை வரவுள்ளதாக அக்கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகியாக கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. அதற்கேற்ப, பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்த ஜே.பி. நட்டா  வரவிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com