15 நாட்களுக்கு பேரணிகள் நடத்த தடை; சென்னை காவல் ஆணையர்!

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சென்னையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாகத் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப் பட்டுள்ளது. மேலும் கோவை சிலின்டர் வெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது;

சென்னையில் அடுத்த 15 நாட்களுக்குத் எந்தவிதமான பேரணிகளோ ஆர்ப்பாட்டங்களோ நடத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி இரவு 11 மணி வரை அமலில் இருக்கும்.

-இவ்வாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

logo
Kalki Online
kalkionline.com