உயிரிழந்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி !

srinivasan
srinivasan
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சென்னை பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த புகைப்படக் கலைஞரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றிய கே.வி.சீனிவாசன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியில் புகைப்படங்களை எடுத்து கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியினிடையே உடல்நிலை பாதிக்கப்பட்டு பணியின் போதே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

கே.வி.சீனிவாசன் நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து நாளிதழில் வெளியிடுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த அவருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் பத்திரிக்கையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தின் கீழ், உயிரிழந்த கே.வி.சீனிவாசன் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். கே.வி. சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

logo
Kalki Online
kalkionline.com