இனி புதன்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

இனி புதன்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

மிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் இந்த நேரத்தில் தடுப்பூசிகள் போடுவதில் துரிதம் காட்டி வருகிறது மாநகராட்சி. அதே நேரத்தில் முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கால வழிமுறைகளையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இனி இந்த தடுப்பூசி முகாம்கள் புதன்கிழமை நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அறுபது வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மூன்றாவது தவணை தடுப்பூசி போடுவதில் முனைப்பு காட்டி வருகிறது மாநகராட்சி என கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் மா. சுப்ரமணியன்.

பண்டிகைகள் அதிகம் வரும் காலகட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த கொரானா கால வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com