வந்தேறிகள் ஓட்டு நமக்கு வேண்டாம்? - சீமான் பேச்சால் வேட்பாளருக்கு பின்னடைவு

வந்தேறிகள் ஓட்டு நமக்கு வேண்டாம்? - சீமான் பேச்சால் வேட்பாளருக்கு பின்னடைவு

தமிழ்நாட்டில் பிற மொழி பேசுபவர்களை “வந்தேறிகள்” என்று சீமான் அழைத்ததற்கு தேர்தல் நேரத்தில் எதிர்வினையாற்றிய குறிப்பிட்ட சமுகத்தை சேர்ந்த வாக்காளர்கள்.

திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அதிமுகவும் - திமுக கூட்டணி சார்பில் காங்கிரசும் பலப்பரீட்சை நடத்தினாலும், ஆளுங்கட்சியாக உள்ள திமுகதான் செல்வாக்கை காட்டி வருகிறது.

நாம் தமிழர் கட்சியோ தனித்து போட்டியிட்டு வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறது. அக்கட்சியின் சார்பில் மேனகா என்பவர் போட்டியிடுகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அச்சமூகத்தை சேர்ந்த வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெறாவிட்டாலும் அதிக வாக்கையாவது பெற்று 2வது 3வது இடத்துக்கு வரலாம் என்று கணக்குப்போட்டு சீமான் வேட்பாளராக நிறுத்தியுள்ளார். மற்ற போட்டியாளர்கள் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர் என்பதால் நாம் தமிழருக்கான தேர்தல் களம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் தமிழர் மட்டும்தான் ஆள வேண்டும் என்று ஆவேசமாக சீமான் பேசுவது வழக்கம்.

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது “வந்தேறிகள் ஓட்டு நமக்கு வேண்டாம்” என்று பேசியதால் அப்பகுதியில் உள்ள அந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். “ஆதி தமிழ் குடிகளே நாங்கள் தான்” எங்களை போய் வந்தேறிகள் என்று எப்படி சொல்லலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஓட்ட கேட்க வந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களை தங்கள் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

 இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக ஈரோடு கிழக்கில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முகாமிட்டு அனல் பறக்கும் பேச்சுக்களால் தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் சீமான்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ‘வந்தேறிகள்’ என குறிப்பிட்ட சமூக மக்கள் நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்தி ஓட்டு கேட்க விடாமல் திருப்பி அனுப்பினர். தங்களது சமுக மக்களை வந்தேறிகள் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதை சுட்டிக்காட்டிய அவர்கள், “எங்களிடமே வாக்கு சேகரிக்க எப்படி வருகிறீர்கள், ஆதி தமிழ் குடிகளே நாங்கள்தான் எங்களை போய் வந்தேறிகள் என்று சீமான் எப்படி சொல்லலாம்” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

இதேபோல, ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் தென்னரசுவை பெண் ஒருவர் முற்றுகையிட்டார். கடந்த முறை எம்எல்ஏ-வாக இருந்த நீங்கள் இந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை எனக்கூறி அந்த பெண் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இரு சம்பவத்துக்கும் திரைக்கு பின்னால் திமுகவினரின் தூண்டுதல் இருக்கக் கூடும் என்றும் மற்ற கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com