ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு  144 தடை உத்தரவு!

ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு  144 தடை உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

-இதுகுறித்து தன் உத்தரவில் அவர் தெரிவித்ததாவது;

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (செப்டம்பர் 11) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதையடுத்து அக்டோபர்  30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா பசும்பொன் ஊரில் நடைபெறுகிறது.

இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது.

மேலும் இம்மாதம் 15-ம் தேதி வரை மற்றும் அக்டோபர் மாதம் 25 முதல் 31-ம் தேதி வரை வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார், சைக்கிள்கள், ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதி பெற்றுதான் அஞ்சலி செலுத்த வரவேண்டும்.

-இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com