10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு!

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ரிசல்ட் வெளிஒயாகின. இத்தேர்வில் 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாவது:

கொரோனா காரணமாக கடந்த கல்வியாண்டில் வகுப்புகள் காலதாமதமாக தொடங்கியதால், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டன. இந்நிலையில் இத்தேர்வுகளுக்கான ரிசல்டை இன்று வெளியிடப்பட்டன.

இதில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 9.12 லட்சம் பேர் எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 93.76% ஆகும். இதில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதல் தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 97.95 % தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து உள்ளது. 97.27 %  தேர்ச்யுடன் விருதுநகர் மாவட்டம் 2-வது இடமும், 97.02 % தேர்ச்சியுடன் ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடமும் பிடித்துள்ளது. 10-ம் வகுப்பு ரிசல்ட்டைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டம் முதலிடமும் பெரம்பலூர் மாவட்டம் 2-ம் இடமும்  விருதுநகர் மாவட்டம் 3-ம் இடத்தையும் பிடித்து உள்ளது

கடந்த பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களில் 12-ம் வகுப்பிற்கு ஜூலை 25-ம் தேதி முதல் உடனடி தேர்வு தொடங்கும். அதேபோல் 10-ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் துவங்கும்.

-இவ்வாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com