கவுன்சிலரை தலையில் தட்டி அமர்த்திய கே.ஏன்.நேரு!

கவுன்சிலரை தலையில் தட்டி அமர்த்திய கே.ஏன்.நேரு!

திருச்சி அருகே 54வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் புஷ்பராஜ் தலையில் ஓங்கி அடித்த அமைச்சர் கே.என். நேருவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 திருச்சி மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கே.என்.நேரு, திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளராகவும் உள்ளார்.

கலைஞர் மு. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நம்பிக்கைக்குரிய  அமைச்சராக கே.என்.நேரு இருந்தார்.

கே.என்.நேரு கடந்த 1989 முதல் 1999 வரை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின்சாரத்துறை, பால்வளத்துறை, செய்தித்துறை, தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருக்கிறார்.

பொதுவெளியில் கே.என். நேருவின் பேச்சும் செயல்பாடும் அடாவடியாகத்தான் இருக்கும். இப்போது கே.என். நேரு, திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் தலையில் ஓங்கி அடித்த சம்பவம் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

திருச்சி பெரிய மிளகுபாறையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் நேரு குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். அப்போது பெண்கள் தண்ணீர் பிடிக்க முயன்ற போது தண்ணீர் பிடித்து கொடுக்க முயன்ற திருச்சி மாநகராட்சியின் 54வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் புஷ்பராஜை, அமைச்சர் நேரு தலையில் கோபமாக ஓங்கி அடித்தார்.

இதைப் பார்த்து சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கவுன்சிலர் என்பதால்தானே அமைச்சர் நேரு தலையில் அடிக்கிறார்; அமைச்சரையே தட்டி உட்கார வைக்க ஒரு முதல்வரால் முடியும் அல்லவா... என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் மைச்சர் நேரு பேட்டியளித்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்க முடியாமல், '' வெங்கடேசன்னு ஒருத்தன் இருக்கானே எம்.பி. யாக அவனிடம் கேளுங்கள்'' என அடிப்படை அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசினார். இதற்கு உடன் இருந்த திமுக நிர்வாகிகளும் பல்லை காட்டினர்.

அதுபோல, மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கே.என். நேரு "எனக்கு செக்யூரிட்டியாக இருந்தவர் இன்று டிஎஸ்பியாக உயர்ந்திருக்கிறார். அவரால் யாரை வேண்டுமானாலும் குற்றவாளி ஆக்க முடியும் யாரையும் விடுவிக்க முடியும்" என்று முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் மாண்பை அருமையாக எடுத்துக்கூறினார்.

பொதுவாக வட மாநிலங்களில் அரசியல் சூழல் இப்படியாக இருக்கும். படிப்பறிவு, பொதுஅறிவு, பண்பு ஆகியவற்றை என்னன்னே தெரியாமல், பிறரை மதிக்காத குணம் படைத்தவர் அரசியலுக்கு வந்தால் எப்படியெல்லாம் நடந்துகொள்வாரோ அதற்கு ஆக சிறந்த உதாரணம் தான் கே.என். நேரு என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

திமுக அமைச்சர்கள் கே. என். நேரு, பொன்முடி ஆகியோர் மக்களை வசைபாடுவது, பொதுவெளியில் கை நீட்டுவது, அசிங்கமாக பேசுவது முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவலியை கொடுத்து வருகிறது.

இதுகுறித்து ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் திமுக பொதுக்குழு கூட்டத்தில் தன் கவலையை தெரிவித்தார். நிம்மதியாக தூங்க முடியவில்லை. தூங்கி காலையில் கண் விழிக்கும்போது ‘இன்று என்ன பிரச்னை வருமோ’ என்ற அச்சத்துடனே ஒவ்வொரு நாளும் கண்விழிக்கிறேன் என்று மேடையில் பேசி அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தும் சில திமுக மூத்த அமைச்சர்களின் செயல்பாடுகள் அரசுக்கும், முதல்வருக்கும் கெட்டபேரை வாங்கித் தருவதாகத்தான் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com