திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளது.

திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அதிமுக துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் சட்டமன்ற உறுப்பினர் இரா. விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 அவர் பேசும்போது,

திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதைப் பொருட்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது.

திமுக ஆட்சியில் மின்சாரம், பால், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து விட்டது.

அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளது.  ஸ்டாலின் பொம்மை முதல்வராக மட்டுமே செயல்படுகிறார்.

பொங்கலுக்கு அதிமுக ஆட்சியில் 2500 ரூபாய் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு 21 தரமற்ற பொருட்கள் வழங்கினார்கள். நடப்பாண்டு 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கினார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திமுக அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஆத்தூர் தாலுகா பித்தளைப்பட்டி கிராமத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமையில் நடைபெற்றது. "திமுக ஆட்சியில் மதுபானம் தங்கு தடை இன்றி கிடைக்கிறது. சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்க்கெட்டு இருப்பதற்கு மதுபானம் எங்கும் கிடைப்பதுதான் முழு காரணமாக உள்ளது. பார் நடத்த திமுகவினருக்கு மட்டுமே லைசென்ஸ் கொடுத்திருப்பதால் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டு இருக்கிறது. தள்ளுவண்டியில் காய்கறி விற்பது போல தள்ளுவண்டியில் மது விற்பது மட்டும்தான் திமுக ஆட்சியில் இல்லாமல் இருக்கிறது.

நகரப் பகுதிகளிலும், பெரு நகரங்களிலும் போதை மருந்துகள், போதை வஸ்துகள் அதிகமாக இருப்பதால் இளம் தலைமுறையினர் கெட்டு சீரழிந்து வருகின்றனர். திமுக ஆட்சி வந்ததற்குப் பிறகு தமிழகம் போதைப் பொருட்களின் சந்தை காடாக மாறி இருப்பது தமிழகம் குட்டிச்சுவராக மாறி போய்விட்டது.

புரட்சித்தலைவி அம்மா அவருடைய ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் உருவாக்கிட வேண்டும். நல்லாட்சி வளர்வதற்கு அதிமுகவினர் அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும். நடைபெற இருக்கின்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயமாக வெற்றிபெறும்.

வெற்றியைத் தடுக்கும் இடத்தில் சிலர் குள்ளநரியாக செயல்படுவர், அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலே மிகப்பெரிய வெற்றியையும் அதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி வாகை சூட அதிமுகவினர் தயாராக வேண்டும் என நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தோல்வி பயத்தால், இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாதவரை வம்படியாக வேட்பாளராக நிற்க வைத்துள்ளனர்' என்று நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுகன், மற்றும் ஒன்றிய செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com