1000 ரூபாய் க்கு விடு வீடாக டோக்கனா?

pongal festival
pongal festival

பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கம் வழங்குவதற்கான டோக்கன் நாளை 27-ந் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப் பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருவைத்து வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்

pongal gift
pongal gift

கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கரும்பு வழங்கால்படமாட்டாது. வெல்லத்திற்கு பதில் சர்க்கரை வழங்கப்பட உள்ளது.

பொங்கல் ரொக்கப் பணம் தமிழ் நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2ம் தேதி சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலினும் , மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்குள் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப் பட உள்ளது

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com