மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதை சீரமைப்பு!

மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் சென்று வர அமைக்கப்பட்ட சிறப்பு மரப்பாதை, சமீபத்தில் தாக்கிய மாண்டஸ் புயலால் சேதமடைந்தது. இப்போது அந்த பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டு, இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக ரூ.1.14 கோடி செலவில் மரத்தினாலான சிறப்புப் பாதை கடந்த 27ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், இம்மாதம் 9-ம் தேதி சென்னையைத் தாக்கிய மாண்டஸ் புயல் காரணமாக அந்த சிறப்புப் பாதை சேதமடைந்தது.

அப்போது அதை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, இந்த சிறப்புப் பாதை சீரமைக்கப்பட்டு, விரைவில் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தாா். மேலும் அந்தப் பாதையில் யாரும் பயணிக்க முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சீரமைப்புப் பணிகள்  முடிவடைந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த சிறப்புப் பாதை இன்றுமுதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவதாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com